அஜித் ரசிகர்களின் நள்ளிரவு கொண்டாட்டம்! - அதிர்ந்துபோன சென்னை

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஊடகங்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில், படம் குறித்து சில யூடியூப் ஊடகங்கள் மிக மோசமாக விளம்பரம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
யார் எப்படி விமர்சனம் செய்திருந்தாலும், எப்போதும் போல படத்தை கொண்டாட முடிவு செய்த அஜித் ரசிகர்கள் சென்னையே அதிர்ந்து போகும் அளவுக்கு நள்ளிரவு முதலே கொண்டாடி வருகிறார்கள்.
சென்னையில் சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. குறிப்பாக ரோகினி திரையரங்கத்தில் நள்ளிரவு காட்சி போடப்பட்டது. இதில் ரசிகர்கள் உற்சாகத்தோடு கலந்துக் கொண்டு மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டினார்கள்.
நள்ளிரவு என்று கூட பார்க்காமல் ரோகினி திரையரங்கில் கூடிய ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து சென்னையே அதிர்ந்து போயுள்ளது.
இதோ அந்த வீடியோ,