Sep 20, 2022 07:09 PM

’வள்ளி மயில்’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்!

’வள்ளி மயில்’ படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிக்காக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் படம் ‘வள்ளி மயில்’. நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகிறது.

 

1980 களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா திரில்லராக உருவாகும் இப்படத்திற்காக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியை கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. 

 

தற்போது சிறுமலையின் காட்டுப்பகுதியில் ஒரு பழமையான கோவில் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மும்பையை சேர்ந்த 50 ஸ்டண்ட் கலைஞர்களுடன் நடிகர் விஜய் ஆண்டனி நாயகி பரியா அப்துல்லா இந்த சண்டைக்காட்சியில் பங்கு கொண்டு நடித்து வருகின்றனர். 

 

இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, பரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார் இவர்களுடன் பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, உதயகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். மாஸ்டர் ராஜசேகர் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் டீஸர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.