குழந்தை நட்சத்திரம் டூ கதாநாயகி! - வைரலாகும் குஷ்பூவின் அரிய புகைப்படம்
தமிழ் சினிமா வரலாற்றில் நடிகை ஒருவருக்கு ரசிகர்களுக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அது குஷ்புவுக்கு தான். தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலேயே தனக்கு என்று தனி இடத்தை பிடித்த குஷ்பு, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து இந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், அங்கேயே கதநாயகியாகவும் அறிமுகமானவர், 1986 ஆம் ஆண்டு ‘கலியுக பாண்டவலு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர், 1988 ஆம் ஆண்டு வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதையடுத்து தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், ரஜினி, கமல், சரத்குமார், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
சினிமாவில் பிஸியாக இருக்கும் போதே இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்துக் கொண்ட குஷ்பு, திருமணத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிப்பதோடு, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, அரசியலில் நுழைந்த குஷ்பு திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர் பிறகு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். தற்போது காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பதவி வகித்து வருவதோடு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போதைய கொரோனா காலத்திலும் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குஷ்பு, கொரோனா ஊரடங்கினால் வீட்டில் இருந்தாலும், சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், 1980 ஆம் ஆண்டு சசி கபூர் நடித்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர், 4 வருடங்களில் ஜாக்கி ஷெராப்புக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த மாற்றம் மற்றும் வளர்ச்சியை நினைவு கூறும் வகையில், அக்காலத்தில் எடுத்த அரிய புகைப்படம் ஒன்றையும் குஷ்பு வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இதோ,