பள்ளி மாணவனுடன் டேட்டிங்! - யாஷிகா ஆனந்த் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அடல்டு காமெடி படம் என்றாலே யாஷிகா தான் முதலில் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அடல்டு விஷயங்களை அளவில்லாமல் செய்து வருகிறார்.
யாஷிகா ஆனந்த் நடிப்பில் ‘ஜாம்பி’ படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வரும் யாஷிகா ஆனந்த், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அவர் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது 9ம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்றாராம். மேலும், இது தனக்கு தவறாக தெரியவில்லை, என்றும் சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே பட வாய்ப்பு தேடி சென்ற இடத்தில் இயக்குநர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய யாஷிகா ஆனந்த், தற்போது 9ம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்றதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.