May 25, 2019 05:30 AM

தீபா வெங்கட்டின் திடீர் முடிவு! - சோகத்தில் ரசிகர்கள்

தீபா வெங்கட்டின் திடீர் முடிவு! - சோகத்தில் ரசிகர்கள்

சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தீபா வெங்கட். ’ரோஜா’, ‘சித்தி’, ‘கோலங்கள்’, ‘அண்ணாமலை’ என பல பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.

 

நடிப்பு மட்டும் இன்றி பின்னணி குரல் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வரும் தீபா வெங்கட், நயன்தாராவுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

 

மேலும், ஹலோ எப்.எம்-மில் நட்சத்திர தொகுப்பாளராக கடந்த 10 வருடங்களாக பணியாற்றி வந்த தீபா, ‘மூன்றாம் பார்வை’ என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சிக்காகவும், தீபாவுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், தனது சொந்த காரணங்களால் ‘மூன்றாம் பார்வை’ நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக தீபா வெங்கட் அறிவித்துள்ளார். அவரது இந்த திடீர் முடிவால், அவரது ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.