Apr 30, 2019 07:11 AM

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த பிரபல நடிகை! - பின்னணியில் பகீர் தகவல்

படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த பிரபல நடிகை! - பின்னணியில் பகீர் தகவல்

தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் வேறு யாருமல்ல, நடிகை திரிஷா தான். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் திரிஷா, அதே சமயம், ஹீரோயின் சப்ஜக்ட்டில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இரவு பகல் பாராமல் நடித்து வருகிறார்.

 

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கும் ‘ராங்கி’ படத்தில் நடித்து வரும் திரிஷா, அப்படத்திற்காக இரவும், பகலுமாக படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை திரிஷா திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். மேலும், அவர் மயக்கமடைவதற்கு முன்னாள் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

 

Trisha

 

இதையடுத்து, திரிஷாவின் இந்த வாந்தி, திடீர் மயக்கத்திற்கு காரணம், அவர் மது அருந்திவிட்டு படபிடிப்பில் பங்கேற்றதாக பகீர் தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

இந்த தகவல்களால் திரிஷாவின் அம்மா ரொம்பவே கோபமடைந்ததோடு, இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது தகுந்த நடிவடிக்கை எடுக்கப்படும், என்றும் எச்சரித்துள்ளார்.