May 25, 2019 11:10 AM

குழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’!

குழந்தைகளை மகிழ்விக்க வரும் ‘கொரில்லா’!

கோடை விடுமுறை முடியப்போகிறதே!, என்ற கவலையில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த வருகிறது தமிழ் சினிமாவின் முதல் ஜிம்பான்ஸி குரங்குப் படமான ‘கொரில்லா’. குழந்தைகளுக்கு பிடித்த சினிமா என்றுமே சோடை போனதில்லை என்பதை சமீபத்திய ‘காஞ்சனா’ நிரூபித்தது போல, ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கொரில்லா’ படத்தின் டிரைலே தற்போது நிரூபித்திருக்கிறது.

 

ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில் டான் சாண்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜீவா ஹீரோவாகவும், ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்திருந்தாலும், இவர்களுக்கு இணையான வேடத்தில் ஜிம்பான்ஸி குரங்கு ஒன்று நடித்திருக்கிறது. ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கும் இந்த குரங்கு ’கொரில்லா’ மூலம் முதல் முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறது. இவர்களுடன் சதீஷ், யோகி பாபு, ராதாரவி என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்.

 

சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் நேற்று பிரம்மாண்டமான விழா மூலம் வெளியிடப்பட்டது.

 

இதில், இயக்குநர்கள் கண்ணன், ராஜேஷ் செல்வா, விஜய், ராஜு முருகன், சந்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர்க்ள் ஆர்.பி.செளத்ரி, டி.சிவா உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஜீவா, “கொரில்லா படம் ஒரு எக்ஸ்டானரி எக்ஸ்பீரியன்ஸ். ஏன் இந்தப்படத்தை தாய்லாந்தில் எடுத்தோம் என்றால் இந்தக் குரங்கு ஒரு ஆங்கிலப்படத்தில் நடித்த குரங்கு அதனால் தான். இந்தக் குரங்கு நல்ல ப்ரண்ட்லியா ஆகிவிட்டது. தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திராவிற்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன். கொரில்லா மாதிரி ஒருபடம் பண்ணுவேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. இப்படி ஜாலியாக ஒரு படம் பண்ணி ரொம்ப நாட்களாகி விட்டது. இந்தமாதிரி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளருக்கு மறுபடியும் ஒரு நன்றி. டான் சாண்டி இந்தக்கதையை என்னிடம் சொல்லும் போது ரொம்ப என்ஜாய் பண்ணிக்கேட்டேன். படத்தையும் என்ஜாய் பண்ணி நடித்தேன். பக்கா காமெடி மசாலா தாண்டி ஒரு நல்ல மெசேஜும் இருக்கும். யுகபாரதி சாருக்கு நன்றி. அவர் எனக்கு நல்லநல்ல பாடல்களை எழுதிக் கொடுத்திருக்கிறார். ரொம்ப ஜாலியான ஒரு படத்தை எடுத்திருக்கோம்.” என்றார்.

 

படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி பேசுகையில், “என்னை அன்பாக அழைத்த இயக்குநர் சாண்டி அவர்களுக்கும் கதாநாயகன் ஜீவா அவர்களுக்கும் நன்றி. அவர் அப்பா கொடுத்த பணத்தில் தான் நாங்கள் வாழ்ந்திருக்கோம். இப்போது போடப்பட்ட பாடல் நன்றாக இருந்தது. இசை அமைப்பாளரைப் பாராட்டுகிறேன். ஜீவாவிற்கு யாரும் காம்படிஷனே கிடையாது. அது அவரது பெரியபலம். அவர் அற்புதமான நடிகர். அவரை முதல் படத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். மனிதர்களை வைத்தே படமெடுப்பது பெரிய கஷ்டம். இவர்கள் மிருகத்தை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது. எனக்கும் ஒரு நல்ல கேரக்டர் தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன்  யோகிபாபு நெகட்டிவ் விசயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள். தயவுசெய்து தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், பொதுமக்கள் அனைவரும் இந்தப்படத்தை ஆதரிக்க வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், “பர்ஸ்ட் ஜீவா சார். ஜீவா சாருக்கு ஜிப்ஸி படத்தில் பெரிய டாஸ்க். அதையெல்லாம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகச் செய்திருந்தார். ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லை என்றால் ஜிப்ஸி எடுத்திருக்க எலெக்‌சன் டென்சன் எல்லாத்தையும் இந்தப்படத்தின் ட்ரைலர் பாடல்களும் போக்கி விடுகிறது. சாம் சி எஸ் தற்போது அவர் ஏற்கும் படங்களுக்கு உயிர் கொடுத்து வருகிறார்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி பேசுகையில், “ட்ரைலர் பார்த்தேன் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பா இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக இருக்கும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.” என்றார்.

 

பாடலாசிரியர் யுகபாரதி பேசுகையில், “ஆர்.பி செளத்ரி தமிழ் சினிமாவில் 22 பாடலாசியர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 56 இயக்குநர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஆனால் அவர் அறிமுகப்படுத்தியதிலே மிகச்சிறப்பானவர் ஜீவா. சாம் சி எஸ் நல்ல பாடல்கள் எழுதக்கூடிய இசை அமைப்பாளர். அவரை நான் மனதார வாழ்த்துகிறேன். இயக்குநர் டான் சாண்டி 20 வருடங்களாக எனக்குத் தெரிந்த தம்பி. தொடர்ச்சியாக கதையோடும் வாழ்க்கையோடும் போராடிக் கொண்டிருந்தார். இந்தப்படம் அவருக்கு பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும்.” என்றார்.

 

Gorilla

 

இயக்குநர் டான் சாண்டி பேசுகையில், “தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்ததிற்காக நன்றி. இசை அமைப்பாளர் எனக்கு மிக நெருக்கமான நண்பர். யுகபாரதி மிக முக்கியமானவர் எனக்கு. மற்றபடி கேமராமேன், எடிட்டர், அவர்களுக்கும் நன்றி. காஸ்ட்யூமர் பூர்த்தி ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார். கொரில்லா டீசரின் பார்த்துவிட்டு சிம்பஸி வைத்து என்னை ஏமாத்துறீயான்னு கேட்டாங்க. ஜீவா சாரை நான் கற்றது தமிழில் இருந்து பார்த்து வருகிறேன். அவர் இல்லை என்றால் இந்தப்படம் இல்லை. இந்தப்படத்தில் அவர் நிறைய உதவி பண்ணி இருக்கிறார். இந்தக் குரங்கு எங்களை அவ்வளவு அடித்திருக்கிறது. தாய்லாந்து சென்று மஜாச் செய்யாமல் வந்த டீம் நாங்கள். எங்களின் இந்த நேர்மையைப் பாராட்டி படத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “முன்னாடியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படம் இது. நான் ரொம்ப கஷ்டப்பட்டு இசை அமைத்தப் படம் இது. ஒரு படம் பார்க்கும் போது இசை மனசுக்குள் ஓடும். இந்தப்படத்தைப் பார்த்தால் நிறைய பதட்டம் இருந்தது. ஏனென்றால் நிறைய வசனங்கள் இருந்தது. அவை நன்றாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு மிக புதுமையாக இருந்தது. பாடலாசியர்கள் யுகபாரதி, லோகன் இருவரும் நன்றாக பாடல் எழுதி இருக்கிறார்கள். இந்த ஆல்பம் ரொம்ப நல்லா வந்திருப்பதாக நினைக்கிறேன். என்னுடைய மியூசிக் டீம் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தப்படத்தில் நிறைய அரசியல் நய்யாண்டிகள் இருக்கிறது. இது குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படம்.” என்றார்.

 

தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசுகையில், “இந்தப்டத்தை பண்ணும் போது குரங்கை வைத்து பண்ணாமல் சிம்பான்ஸியை வைத்து எடு என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்னார். சாண்டி சிறப்பாக படத்தை எடுத்து இருக்கிறார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் அழிந்து வரும் உயிரினமான சிம்பான்ஸி குரங்கு இரண்டை திரைப்படக்குழு தத்தெடுத்தது. 

 

குழந்தைகளுக்கான படமாகவும், அதே சமயம் பெரியவர்களுக்கு பிடித்த சாகசங்கள் நிறைந்த படமாகவும் உருவாகியிருக்கும் ‘கொரில்லா’ வரும் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகிறது.