Dec 15, 2019 05:47 AM

அரசியல்வாதி காட்டிய ஆர்வம்! - அப்செட்டில் நயன்தாரா

அரசியல்வாதி காட்டிய ஆர்வம்! - அப்செட்டில் நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். 

 

கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் நயன்தாராவை, தங்களது படங்களில் ஹீரோயினாக்குவதற்காக பல தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசியல்வாதி காட்டிய ஆர்வத்தினால் நயன் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறாராம்.

 

‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக நாகர்கோவிலில் முகாமிட்டுள்ள நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு விசிட் அடித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்தவரை, அப்பகுதி பா.ஜ.க பிரமுகர் ஒருவர் சந்தித்து பேசியதோடு, ”பா.ஜ.க-வில் நீங்கள் சேர வேண்டும்”, என்ற தனது விருப்பத்தை நயன்தாராவிடம் கூறினாராம்.

 

சற்றும் எதிர்ப்பார்க்காத அந்த அரசியல்வாதியின் இத்தகைய ஆர்வமான பேச்சால் அப்செட்டான நயன்தாரா, அந்த இடத்தில் இருந்து சட்டென்று கிளம்பி விட்டாராம்.