Oct 03, 2022 08:19 AM

வந்தியத்தேவனாக நடித்தது அற்புதமான பயணம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

வந்தியத்தேவனாக நடித்தது அற்புதமான பயணம் - நடிகர் கார்த்தி நெகிழ்ச்சி

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணமாக இருந்தது, என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

 

வந்தியத்தேவனாக நடித்த அனுபவம், அற்புதமான பயணம். அந்த மகத்தான உணர்வை நன்றி என்ற வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. பொன்னியின் செல்வன் என்றொரு மாயாஜால காவியம் படைத்த அமரர் கல்கிக்கு முதலில் ஒரு பெரிய வணக்கமும் மரியாதையும் சொல்லிக் கொள்கிறேன். 

 

இத்தனை வருடங்களாக இதைப் பின்பற்றி மறக்க முடியாத தலைசிறந்த படைப்பை வடிவமைத்த எங்கள் மணி சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இதுவரை பார்த்திராத பிரமிக்க வைக்கும் காட்சிகளைக் கொடுத்து செட்டில் உந்து சக்தியாக இருந்த ரவிவர்மன் சார் அவர்களுக்கு நன்றி. எங்களின் பொக்கிஷம் ஏ ஆர் ரஹ்மான் சார் தனது இசையால் நம்மை பரவசப்படுத்தியதற்காக நன்றி. இந்த பொற்காலத்தை மீண்டும் உருவாக்கியதற்காக தோட்ட தரணி சாருக்கு நன்றி. 

 

இவரைத் தவிர வேறு யாரும் இந்தளவுக்கு உருவாக்கி இருப்பார்களா என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஜெயமோகன் சார் எழுதிய அருமையான வசனம் மற்றும் ஒரு வரியின் மூலம் அழியாத கல்கி சாரின் எழுத்தின் உணர்வை வெளிப்படுத்திய ஸ்ரீகர் பிரசாத் சாருக்கு நன்றி.

 

தனிச்சிறப்பு மிக்க கதாபாத்திரங்களை மிகவும் நிஜமாக காட்டியதற்காக ஏகா மற்றும் விக்ரம் கெய்க்வாட் சாருக்கு நன்றி. டவுன்லி, ஆனந்த் மற்றும் குழுவினர் உற்சாகமான மற்றும் செழுமையான ஒலிகளுக்காக நன்றி. திரைக்குப் பின்னால்  தங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்த சினிமாவை காதலிக்கும் எண்ணற்றோர்களுக்கு நன்றி.

 

மேலும், இந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதற்காக ஒருவரையொருவர் மற்றும் சினிமா கலையின் மீது மிகுந்த அன்புடன் கூடிய அற்புதமான நடிகர்கள், மரியாதைக்குரிய மூத்தவர்கள் மற்றும் எனது அன்பான சக ஊழியர்கள். ஒவ்வொரு நாளும் கணக்கைப் பார்த்த சிவாவுக்கும், இந்த ஒட்டுமொத்த குழுவின் மீது நம்பிக்கை வைத்த சுபாஸ்கரன் சாருக்கும், இறுதியாக இப்படிப்பட்ட அன்பையும் பெருமையையும் எங்களுக்கு பொழிந்த அன்பான ரசிகர்களே, நண்பர்களே, சினிமா ஆர்வலர்களே, உங்கள் எல்லா அன்பையும் பெறுவது மிகவும் மகத்தானது.

 

இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.