பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததும் ஆரம்பித்த கஸ்தூரி! - சிக்கினார் சாக்ஷி

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 யில் நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பங்கேற்க போவதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, கஸ்தூரி இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகிவிட்டார்.
கஸ்தூரி என்றாலே சர்ச்சை என்று பொருள், என்பது போல அவர் பேசும் அனைத்தும் சர்ச்சையாகி வருவதால், பிக் பாஸ் வீட்டில் அவர் எப்படி இருக்கப் போகிறார். சக போட்டியாளர்கள் அவரை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள், என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்றைய எப்பிசோட்டில் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததுமே தனது வேலையை ஆரம்பித்துவிடுகிறார். அதாவது, சாக்ஷியை அழைத்து ”உங்க கிட்ட நான் நிறைய கேள்வி கேட்கனும்” என்று கூறுகிறார்.
சமீபகாலமாக கவினுடனான சாக்ஷியின் விளையாட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கஸ்தூரி கையில் எடுப்பார் என்றும், சாக்ஷியை அவர் வெளுத்து வாங்கப் போகிறார், என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, கஸ்தூரியால் இனி பிக் பாஸ் வீடு ரனகளமாகவது உறுதி.