Nov 06, 2021 12:19 PM

சிவகார்த்திகேயனின் புதிய சம்பளத்தால் அதிர்ச்சியில் உரைந்த கோலிவுட்!

சிவகார்த்திகேயனின் புதிய சம்பளத்தால் அதிர்ச்சியில் உரைந்த கோலிவுட்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன், நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

 

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும் ‘டாக்டர்’ திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டதாகவும் படக்குழுவினர் அறிவித்தனர்.

 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை திடீரென்று உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் அவரது சம்பள உயர்வு சாதரணமானதாக அல்லாமல், ஒட்டு மொத்த மோலிவுட்டையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளதாம்.

 

ஆம், சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ.30 கோடியாக உயர்த்திவிட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு அவர் ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.