Jan 27, 2018 01:06 PM

விஷாலுக்கு நாமம் போட்ட மேனஜர் - சோகத்தில் வி.எப்.எப்!

விஷாலுக்கு நாமம் போட்ட மேனஜர் - சோகத்தில் வி.எப்.எப்!

நடிப்பில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அதிரடி காட்டி வரும் விஷால், சினிமாவில் மட்டும் இன்றி சினிமா சங்கங்களிலும் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனால், அவரது படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஆனாலும், அவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்காகவே, வெளி தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்காமல், தனது நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே விஷால் நடித்து வருகிறார்.

 

படங்கள் வெளியாவதில் ஏற்படும் காலதாமதத்தால் பொருளாதார ரீதியாக சில இழப்புக்களை சந்தித்தாலும், நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பைரசியை தடுப்பது என்று விஷால் பிறர் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஆர்.கே.நகர் தேர்தலிலும் போட்டியிட முயன்று அது முடியாமல் போனதால், வரும் சட்டமன்ற தேர்தலில் விஷால் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இப்படி, தனது வேலையை தவிர்த்துவிட்டு பிறர் வேலைகளில் ஈடுபாடு காட்டி வரும் விஷால், தனது திரைப்பட வியாபாரங்களை தனது மேனஜர் முருகராஜ் என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். விஷாலுக்கு பர்ஷனல் மேனஜர் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த இந்த முருகராஜ், விஷாலிடம் இருந்து ரூ.18 கோடியை சுருட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சினிமா சங்கங்கள், அரசியல் ஈடுபாடு, அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவற்றோடு நடிப்பையும் கவனித்து வந்த விஷால், தனது நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நம்பிக்கை பேரில் முருகராஜியிடம் ஒப்படைந்திருந்தாராம். விஷாலின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மேனஜர் முருகராஜ், பல ஆண்டுகளாக விஷாலுக்கு தெரியாமல் பணத்தை சுருட்டி வந்துள்ளார். இதுவரை அவர் விஷாலிடம் இருந்து சுமார் 18 கோடி அடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில், மேனஜரின் இந்த தில்லாலங்கடி திருட்டி வேலைப் பற்றி கண்டுபிடித்த விஷால், அவரை கண்டித்து வெளியே அனுப்பிவிட்டாராம். ஏற்கனவே சொந்த படம் தயாரிப்பால் பல கோடி கடனாளியாக இருக்கும் விஷால், தனது மேனஜரிடம் 18 கோடியை பறிக்கொடுத்துவிட்டு சோகத்தில் இருக்கிறாராம். அவரது சோகம் அவரது நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியையே (வி.எப்.எப்) பெரும் சோகத்தில் தள்ளியுள்ளதாம்.