Aug 05, 2019 06:09 PM

2 நாட்களுக்கு முன்பே ‘நேர்கொண்ட பார்வை’ பட சிறப்பு காட்சி!

2 நாட்களுக்கு முன்பே ‘நேர்கொண்ட பார்வை’ பட சிறப்பு காட்சி!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தியில் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். போனி கபூர் தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் ரிலீஸ் தேதியான ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னையில் பல திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது. அதாவது, இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 6) மாலை 5 மணிக்கு சிங்கப்பூரில் நேர்கொண்ட பார்வை படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இதன் மூலம் நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் காட்சி சிங்கப்பூரில் திரையிடப்படுகிறது.