Mar 15, 2018 04:49 AM

துருவை தொடர்ந்து விக்ரம் குடும்பத்தில் இருந்து வரும் இன்னொரு நாயகன்!

துருவை தொடர்ந்து விக்ரம் குடும்பத்தில் இருந்து வரும் இன்னொரு நாயகன்!

பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வர்மா’ படத்தின் மூலம் விக்ரமின் மகம் துருவ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், துருவுக்கு ஹீரோயின் தேடுவதில் பாலா மும்முரம் காட்டி வருகிறார்.

 

இந்த நிலையில், விக்ரமின் குடும்பத்தில் இருந்து மேலும் ஒருவர் ஹீரோவாக உள்ளார். அதாவது விக்ரமின் சகோதரியின் மகன் அர்ஜுமன் என்பவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

 

சினிமா பள்ளியில் முறையாக நடிப்பு பயின்றுள்ள அர்ஜுமன், சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவணைப்போடு சினிமாவில் அறிமுகமாகிறார்.