Dec 16, 2019 06:19 PM

மாயமான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மகள்! - காரணம் இது தான்

மாயமான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மகள்! - காரணம் இது தான்

பிரபல கிராமிய பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி, அனிதா தம்பதியின் மூத்த மகள் பல்லவி. இவர் எம்.பி.பி.எஸ் படித்திருக்கிறார். இவர் நேற்று இரவு முதல் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புஷ்பவனம் குப்புசாமி போலீசில் புகார் அளித்திருக்கிறாராம்.

 

நேற்று இரவு பல்லவிக்கும், அவரது தங்கைக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் கோபமடைந்த பல்லவி, வீட்டிலிருந்த காரை எடுத்துக் கொண்டு இரவு 8 மணிக்கு வெளியே சென்றாராம். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லையாம்.

 

இது தொடர்பாக சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் குப்புசாமி - அனிதா குப்புசாமி புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Kuppusamy daughter