Jan 09, 2020 12:46 AM

எப்போதும் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்த ரஜினிகாந்த்!

எப்போதும் தான் நம்பர் 1 என்பதை நிரூபித்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. இதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதலே தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இதுவரை வந்த தமிழ்ப் படங்களில், தமிழ் மொழியிலேயே அதிக தியேட்டர்களில் வெளியாகும் முதல் படம் என்ற பெருமையை ‘தர்பார்’ பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாவதோடு, தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகிறது.

 

மேலும், அரபு நாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ‘தர்பார்’ படம் வெளியாவதோடு, பல வெளிநாடுகளில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் படம் வெளியாகிறது. இதன் மூலம், தான் எப்போதும் நம்பர் 1 என்பதை ரஜினிகாந்த் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.

 

ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் மிக மிக முக்கியமான படமாக அமைந்திருக்கும் ‘தர்பார்’ முதல் நாள் வசூல் மட்டும் ரூ.65 முதல் 70 கோடி வரை இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது. அத்துடன், வசூலில் மிகப்பெரிய சாதனையை படம் நிகழ்த்தும் என்றும் கூறப்படுகிறது.