May 15, 2019 06:14 PM
கூலி தொழிலாளியின் மகளை ஊக்கப்படுத்திய விஜய் சேதுபதி!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிபவரின் மகள் இலக்கியா, மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.
தங்கம் வென்ற இலக்கியாவை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அகில இந்திய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற சார்பில், மன்றத்தின் செயலாளர் குமரன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவுக்கு தங்கம் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.