Sep 20, 2019 03:37 AM

என் ரசிகர்கள் மீது கை வைத்தால்...! - எச்சரிக்கை விடுத்த விஜய்

என் ரசிகர்கள் மீது கை வைத்தால்...! - எச்சரிக்கை விடுத்த விஜய்

‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பரபரப்பாக சில விஷயங்கள் பேசப்போவதாக நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோல், மனுஷன் அரசையே எச்சரிக்கும் விதத்தில் அதிரடியாக பேசியிருக்கிறார்.

 

தாம்பரத்தில் ஒரு கல்லூரில் நடைபெற்ற ‘பிகில்’ இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் ஒரு பேனர்கள் கூட வைக்கப்படவில்லை. அதே சமயம், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

 

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய விஜய், தனது பேனர்களை கிழிங்க, கட்-அவுட்களை உடைங்க, எதற்காக என் ரசிகர்கள் மீது கை வைக்கிறீங்க. அவங்க ஆசையாக வைத்த பேனர்களை உடைத்தால் கோபம் வரத்தான் செய்யும். இனி என் ரசிகர்கள் மீது கை வைத்தா.., இது என் வேண்டுகோள், கேட்க முடிந்தால் கேளுங்க, என்று எச்சரிக்கும் தோனியில் பேசியிருக்கிறார்.

 

தொடர்ந்து பேசியவர், “யார எங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்குமோ, அதை யோசிச்சி உட்காரை வைங்க. சுபஸ்ரீ 

 

விளையாட்டில் மேம்படனும்னா அரசியல்ல புகுந்து விளையாட்டு பண்ணுங்க, விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. நாம கோல் போடுறத தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம்ம கூட இருக்கறவங்களே கூட சேம் சைட் கோல் போடுவாங்க. எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். காரில் செல்லும் போது கருணாநிதியை தவறாக பேசியவரை இறக்கிவிட்டார் எம்.ஜி.ஆர்.

 

மரணத்தில் முக்கிய குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல், லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சகத்தின் மீது நடவடிக்கை எடுத்தது சரியில்லை” என்று தெரிவித்துள்ளார்.