May 02, 2021 09:48 AM

ஆபத்தான நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி!

ஆபத்தான நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா மருத்துவமனையில் அனுமதி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா, திடீர் உடல் நிலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

சுட்டி தொலைக்காட்சி மூலம் தொகுப்பாளி பயணத்தை தொடங்கிய பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றினாலும், சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சி தான் அவரை மக்களிடம் கொண்டு சேர்த்தது. அந்த நிகழ்ச்சியின் பல எப்பிசோடுகளை தொகுத்து வழங்கியவர், தற்போது சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 8 தொகுத்து வழங்கி வருகிறார்.

 

இந்த நிலையில், பிரியங்காவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா, என்பது குறித்து தெரியவில்லை.