Apr 06, 2021 11:50 AM

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? - வெளியான தகவலால் பரபரப்பு

விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? - வெளியான தகவலால் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் காலை 6 மணிக்கே வாக்குச்சாவாடிகளில் குவிய தொடங்கினர். தமிழகம் முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்தது, பெரும் விவாத பொருளாகியுள்ளது. அதாவது, பெரோல் விலை உயர்வால் பாதிப்புக்குள்ளான மக்களின் அவலநிலை சுட்டிக்காட்டும் வகையில் தான், நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்ததாக கூறப்படுகிறது.

 

இப்படி ஒரு சர்ச்சை எழுந்ததால், ஓட்டு போட சைக்கிளில் வந்த விஜய், திரும்பி செல்லும் போது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

 

அதேபோல், விஜய் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்ததால், அவர் தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக எதையோ சொல்ல வருகிறார், என்ற கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.