விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்! - புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்
’இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட புகழ் யாஷிகா ஆனந்த், தற்போது யோகி பாபுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர், அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்றால், அவரது ரசிகர்கள் கண்ணீர் விடுகின்றன.
யாஷிகா ஆனந்த் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்துள்ளார். அவருக்கு காலில் அடிபட்டிருக்கிறது. சிறிய காயம் தான் என்றாலும், சிறு விபத்து ஏற்பட்டுவிட்டதாக பதிவிட்டிருப்பவர், எப்படி விபத்து ஏற்பட்டது, என்பதை மட்டும் பதிவிடவில்லை.
ஆனால், அந்த அடியை பார்த்தால், எதாவது பார்ட்டியில் யாஷிகா உற்சத்திற்கு சென்று கீழே விருந்திருப்பாரோ என்று நினைக்க தோன்றுகிறது.
உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா, என்று இந்த புகைப்படத்தை பார்த்து சொல்லுங்க,