Feb 04, 2018 05:30 PM

அதுல்யா ரவிக்கு வந்த ஆசை!

அதுல்யா ரவிக்கு வந்த ஆசை!

குறும்படங்கள் மூலமாகவே பல ரசிகர்களை கவர்ந்த அதுல்யா ரவி, ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, மேலும் பல அரசிகரக்ளை கவர்ந்தார்.

 

நடிப்பு, அழகு என்று முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அவருக்கு பல வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதையடுத்து, வி.இசட்.துரை இயக்கத்தில் ‘ஏமாலி’ படத்தில் வித்தியாசமான வேடத்தில் அதுல்யா ரவி நடித்தார். சமீபத்தில் வெளியான அப்படம் அவரை தமிழ் சினிமா இன்னும் அதிகமாக கவனிக்க வைத்துள்ளது.

 

இந்த நிலையில், அதுல்யா ரவி தனது சினிமா வாழ்க்கையின் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, அவர் தீவிர விஜய் ரசிகையாம். அதனால், விஜய் படத்தில் எந்த வேடமாக இருந்தாலும் அவர் நடிக்க ரெடியாக இருக்கிறாராம்.

 

”நான் முதலில் விஜய் ரசிகை, பிறகு தான் நடிகை” என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.