Apr 16, 2019 11:44 AM

சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் விதமாக உருவாகியிருக்கும் ‘காபி’

சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் விதமாக உருவாகியிருக்கும் ‘காபி’

நமக்கு தெரியாமலேயே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் விதத்தில் உருவாகியிருக்கும் படம் ‘காபி’. ஓம் சினி வென்ச்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கியிருக்கும் இப்படத்தில் ராகுல் தேவ், இனியா, முக்த கோட்சே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்து விடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போது, பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். எல்லாம் கஷ்டங்களும் தீர்ந்தது, இனி சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் வாழலாம் எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அவள் எப்படி எதிர்கொண்டு வெற்றி பெற்றாள் என்பதே இப்படத்தின் கதை.

 

மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ள இப்படம் நமக்கு தெரியாமலேயே நம்மை அச்சுறுத்தும் ஒரு சமூக விழிப்புணர்வு பற்றியும் பேசுகிறது.

 

வெங்கடேஷ்.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மோகன் ராஜா பாடல்கள் எழுத, வெங்கட்நாத் இசையமைக்கிறார்.