3 நாட்களில் அளவுக்கு அதிகமான ஆல்கஹகால்! - பகீர் கிளப்பிய காஜல் அகர்வால்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தமிழில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, ‘பாரிஸ் பாரிஸ்’, ‘ஹேய் சினாமிகா’, தெலுங்கில் ‘மோசகல்லு’, சிரஞ்சீவியின் ‘ஆச்சார்யா’, இந்தியில் ‘மும்பை சகா’ மற்றும் விஜயின் 65 வது படம், என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.
தற்போது ஊரடங்கினால் தனது குடும்பத்துடன் அதிக நேரங்களை செலவிட்டு வரும் காஜல் அகர்வால், அவ்வபோது தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் காஜர் அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியதோடு, அவரது ரசிகர்களை பீதியடைய செய்திருக்கிறது.
அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த மூன்று நாட்களாக எனது கை அளவுக்கு அதிகமான ஆல்கஹகாலை பார்த்துவிட்டது, எனது லிவர் கூட இந்த அளவுக்கு ஆல்கஹாலை பார்த்ததில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வாலின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானதோடு, நீங்கள் மது அருந்துவீர்களா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்கள்.