நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பு தரும் ‘கே.ஜி.எப்’!
கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான யாஷ் நடிப்பில் கடந்த வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. கன்னடத்தில் மட்டும் இன்றி தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
படத்தின் பிரம்மாண்டத்தையும், மேக்கிங்கையும் பார்த்து ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரே வியந்தனர். மேலும், இப்படத்தின் இடண்டாம் பாகத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, ‘கே.ஜி.எப்’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், படக்குழுவினர் நடிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு வாய்ப்பு ஒன்றையும் வழங்கியிருக்கிறார்கள்.
ஆம், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ‘கே.பி.எப்’ படக்குழு நடிகர்களுக்கான ஆடிசன் நடத்துகிறது. இதில் கலந்துக் கொண்டு சொந்தமாக ஒரு நிமிடத்திற்கு வசனம் பேசி நடிக்க வேண்டுமாம். இந்த ஆடிசனின் நடிக்க ஆர்வமுள்ள யார் வேண்டுமானாலும் கலந்துக்கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு இதோ,