May 07, 2024 05:38 PM

’மெளனகுரு’ புகழ் இயக்குநர் சாந்தகுமாரின் ‘ரசவாதி’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!

’மெளனகுரு’ புகழ் இயக்குநர் சாந்தகுமாரின் ‘ரசவாதி’ மே 10 ஆம் தேதி வெளியாகிறது!

‘மெளனகுரு’ திரைப்படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சாந்தகுமார், தந்து இரண்டாவது படமான ‘மகாமுனி’ படத்திற்காக அதிகமான வருடங்களை இடைவெளியாக எடுத்துக் கொண்டாலும், கதையாசிரியராகவும், திரைப்படக்கள ஆசிரியராகவும் தனக்கென்று தனி ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றிருக்கிறார். அந்த வகையில் அவரது அடுத்த படத்திற்காக காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்து படைக்க வருகிறது சாந்தகுமாரின் ‘ரசவாதி’.

 

இப்படத்தை இயக்கியிருப்பதோடு டி.என்.ஏ மெக்கானிக் கம்பெனி நிறுவனம் மூலம், சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மலையாள நடிகர் சுஜித் முக்கியமான வேடத்தில் நடிக்க, ஜி.எம்.சுந்தர், ரிஷிகாந்த், அருள்ஜோதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

வரும் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை தமிழ்கம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், ‘ரசவாதி’ படத்தின் வெளியீட்டு முன் விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சாந்தகுமார், “என்னுடைய படம் சிறப்பாக உள்ளது என்று நீங்கள் சொன்னால் அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழு தான். நடிகர்கள், தொழில்நுட்ப குழுவை சேர்ந்தவர்கள், பப்ளிசிட்டி என எல்லாருமே தங்கள் சிறந்த உழைப்பை கொடுத்துள்ளனர். 'ரசவாதி' சிறப்பாக வந்துள்ளது. 'மகாமுனி', 'மெளனகுரு' படத்திற்கு அடுத்தபடியாக இந்தப் படம் வேறொரு அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும். படம் மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.” என்றார்.

 

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசுகையில், “இதற்கு முன்பு பேசிய எல்லோருமே அவர்கள் கதாபாத்திரத்திற்காக நன்றி சொன்னார்கள். அதுபோலதான் எனக்கும் சூப்பரான கதாபாத்திரம். கோவாவில் படப்பிடிப்பில் இருந்தபோது என்னை சாந்தகுமார் சார் அழைத்தார். அவர் என்னை தாஸ் என்றுதான் கூப்பிடுவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இந்த படம் வெளியாக இருக்கிறது. சாந்தகுமார் சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது இந்த படத்தின் மூலம் நிறைவேறியது மகிழ்ச்சி. மே 10 அன்று படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்.” என்றார்.

 

நடிகை தான்யா ரவிச்சந்திரன் பேசுகையில், “இந்த வாய்ப்பு கொடுத்த சாந்தகுமார் சாருக்கு நன்றி. உடன் நடித்த அர்ஜூன் தாஸ் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. இதில் என் கதாபாத்திர பெயர் சூர்யா. இதற்கு முன்பு நான் நடித்திருந்த படங்களில் இருந்து இந்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.” என்றார். 

 

படத்தொகுப்பாளர் சாபு ஜோசப் பேசுகையில், “இயக்குநர் சாந்தகுமார் முதல்முறையாக ஒரு காதல் படம் செய்துள்ளார். இவ்வளவு நாட்கள் வில்லனாக பார்த்து வந்த அர்ஜூன் தாஸ் சாக்லேட் பாயாக நடித்திருக்கிறார். சுஜித் வில்லனாக மிரட்டியிருக்கிறார். லவ், ஆக்‌ஷன் என படம் சிறப்பாக வந்திருக்கிறது. உங்கள் ரெஸ்பான்ஸூக்காகக் காத்திருக்கிறேன்.” என்றார். 

 

நடிகர் அருள்ஜோதி பேசுகையில், ”’மெளன குரு’ தான் எனக்கு முதல் படம். 'மகாமுனி' படத்தில் சாந்தகுமார் சார் கூப்பிட்டபோது எனக்கு அந்த கதாபாத்திரம் செட் ஆகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி!” என்றார்.

 

நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில், ”எனக்கு பிடித்த இயக்குநர் சாந்தகுமார் அவருடைய படத்திலேயே நான் நடித்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.  படக்குழுவினர் அனைவருடனும் வேலைப் பார்த்தது சந்தோஷம்!.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் சரவணன் இளவரசு பேசுகையில், ”இது எனக்கு முதல் படம். முதல் படம் என்று இல்லாமல் வேலை செய்வதற்கு அனைத்து சுதந்திரத்தையும் இயக்குநர் சாந்தகுமார் கொடுத்தார். கொடைக்கானல், மதுரை ஆகிய இடங்களில் படமாகிக்கியுள்ளோம். என்னுடைய முதல் படமே சாந்தகுமார் சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!” என்றார்.

 

இணைத் தயாரிப்பாளர் கோவர்தன் பேசுகையில், “நாம் இணைத் தயாரிப்பு செய்யும் முதல் படம் இது. வித்தியாசமாக ரொமாண்டிக் கதை முயற்சி செய்கிறேன் என்று சாந்தகுமார் சொன்னார். படம் நன்றாக வந்திருக்கிறது.” என்றார். 

 

நடிகர் ஜி.எம்.சுந்தர் பேசுகையில், “’ரசவாதி’ என்ற டைட்டிலே பிரமாதமான விஷயம். தனக்குள் ஏற்படும் விஷயத்தால் ஆளே மாறிப்போகும் ஒருவனின் கதைதான் இது. 'மகாமுனி' படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுத்தார். அதேபோலதான், இந்தப் படத்திலும். அர்ஜூன் தாஸ், தான்யா என உடன் நடித்தவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர்.” என்றார். 

 

நடிகை தீபா பேசுகையில், ”படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்த இயக்குநருக்கு நன்றி.” என்றார்.

 

நடிகை ரேஷ்மா பேசுகையில், “நான் இந்த மேடைக்கு வர காரணமாயிருக்கும் என் அம்மா, அப்பாவுக்கு நன்றி. படத்தில் உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

நடிகர் சுஜித் பேசுகையில், ”சில இயக்குநர்கள் தங்களுக்குப் பிடித்த சேஃப் ஜானரிலேயே படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், சாந்தகுமார் சார் அதை உடைக்க விரும்பி 'ரசவாதி' படம் எடுத்திருக்கிறார். படம் உங்களுக்குப் பிடித்தபடி வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.” என்றார்.