Apr 18, 2019 06:38 PM

ஓட்டு போடுவதை நிராகரித்த சிம்பு! - ஏன் தெரியுமா?

ஓட்டு போடுவதை நிராகரித்த சிம்பு! - ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சச்சை மன்னனான சிம்பு, எதாவது சர்ச்சையில் சிக்குவதும், வம்பில் மாட்டுவதும் என்றிருந்த நிலையில், தற்போது அனைத்தையும் குறைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

 

அதேபோல், மக்கள் நல குறித்தும், சமூக விழிப்புணர்வு குறித்தும் பேசி வரும் சிம்பு, தேர்தல் குறித்து எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

 

இந்த நிலையில், இன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், விஜய், அஜித், ரஜினி, கமல், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் ஆர்வமாக வாக்கு செலுத்தியதோடு, வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் கூற, சிம்பு மட்டும் மிஸ்ஸிங்.

 

சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்த தி.நகர் பகுதி வாக்குச் சாவடியில் தான் சிம்புவும் ஓட்டு போடுவார் என்பதால், அவர் வருவர் என்று பத்திரிகையாளர்கள் எதிர்ப்பார்த்திருக்க, சிம்பு வராமல் ஓட்டு போடுவதை தவிர்த்துவிட்டார்.

 

சிம்பு ஓட்டு போடுவதை தவிர்த்தது ஏன்? என்று கேள்வி எழ, அதற்கு அவரது தந்தையும், நடிகரும், அரசியல் தலைவருமான டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

 

T Rajendar

 

சிம்பு ஓட்டு போடாததற்கான காரணத்தை கூறிய டி.ஆர், சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறியதில்லை. ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். அவரால் வர முடியாத சூழ்நிலை. அதனால் தான் வரவில்லை, என்று தெரிவித்தார்.