Nov 07, 2019 04:17 AM

ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ள தமிழ் நடிகைகள்!

ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ள தமிழ் நடிகைகள்!

உலகின் பல்வேறு நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானதாக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை குற்றச் செயல் அல்ல, அது அவர் அவர் மனவிருப்பம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புக்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர். குறிப்பாக தமிழ் நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்தார்கள்.’

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான சிலர் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவர்களாக இருக்கலாமோ, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், அவர்களது சமீபத்திய சோசியல் மீடியா பதிவுகள் தான்.

 

‘மேயாதா மான்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமான இந்துஜா, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும், முன்னணி ஹீரோயினாவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டுபவர், அவ்வபோது போட்டோ ஷூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதில், சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து வருகிறார்.

 

அந்த வகையில், இந்துஜா சமீபத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் லைக்குகளை அள்ளோ அள்ளு என்று அள்ளிய நிலையில், அந்த புகைப்படங்களை பார்த்த நடிகைகள் மகிமா நம்பியார் மற்றும் அதுல்யா ரவி இருவரும், “திருமணம் செய்து கொள்ளலாமா” என்று இந்துஜாவிடம் கேட்டனர். அதற்கு இந்துஜாவும் ஓகே சொல்லிவிட்டார்.

 

Induja athulya and Magima

 

இதைப் பார்த்த ரசிகர்கள், இந்த நடிகைகளுக்கு ஓரினச்சேர்க்கையில் விருப்பம் இருக்கிறது போல, என்று கமெண்ட் தெரிவிக்க, அதற்கு சில நெட்டிசன்கள், இப்போது தான் அதற்கு சட்டமே அனுமதி வழங்கிவிட்டதே, என்று பதில் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

 

மொத்தத்தில், கும்முனு இருக்கும் இந்துஜா மீது நடிகைகள் மகிமாவுக்கும், அதுல்யா ரவிக்கும் ஈர்ப்பு வந்துவிட, அவர்களின் ஈர்ப்பை இந்துஜாவும் புரிந்துக் கொண்டார். 

 

இந்த பஞ்சு கூட்டம் நெருப்பு இல்லாமலே, தங்களின் அனல் காற்று மூலமாகவே பத்திக்க அதிக வாய்ப்பு உள்ளது.