Feb 28, 2024 05:51 AM

’ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்? - நடிகர் கிருஷ்ணா பதில்

’ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்? - நடிகர் கிருஷ்ணா பதில்

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் ஐசரி கே.கணேஷின் பிரமாண்டமான தயாரிப்பில், வருண் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக களம் இறங்கும் திரைப்படம் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதோடு, நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

அறிமுகப்படத்தில் இருந்தே நாயகனாக நடித்து வரும் கிருஷ்ணா, தற்போது வில்லன் வேடம் ஏற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்த, அது பற்றி அவரிடமே கேட்டதற்கு, “கெளதம் மேனன் தனது படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பது மட்டும் இன்றி, அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடையும் அளவுக்கு வடிவமைப்பார். அப்படிப்பட்டவர் படத்தில் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததும், ஒரு கணம் கூட யோசிக்காமல் உடனே சம்மதித்து விட்டேன்.

 

Varun in Krishna in Joshua Imai Pol Kakka

 

எனக்கு கெளதம் சார் முழு சுதந்திரம் கொடுத்தார், அவருடன் பணிபுரிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் சவாலான சண்டைக்காட்சிகள் இருக்கிறது. ஆக்ஷனுக்கு என வரையறுத்த எல்லைகளைத் தாண்டி வருண் நடித்திருக்கிறார். நிச்சயம் அவரை இந்த படம் சிறந்த நடிகராக நிலைநிறுத்தும்.  பார்வையாளர்களுக்கு பரபரப்பான அனுபவத்தை கொடுப்பதோடு, கெளதம் சாரின் ஆக்‌ஷன் விருந்தாகவும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ இருக்கும்.” என்றார்.