Oct 17, 2017 06:36 PM

26 ஆம் தேதி நடக்க இருந்த நடிகை பாவனா திருமணம் நடக்காது!

26 ஆம் தேதி நடக்க இருந்த நடிகை பாவனா திருமணம் நடக்காது!

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உற்படுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த குற்றத்திற்கு பின்னணியில் பிரபல நடிகர் திலீப் இருப்பது இன்னும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்தால் பெரும் மன உலைச்சலுக்கு ஆளான பாவனா, தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

அதேபோல், கன்னட படங்களில் நடித்த போது கன்னட பட அதிபர் நவீன் என்பவரை காதலித்தார். பாவனாவுக்கும் நவீனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் இம்மாதம் (அக்டோபர்) 26 ஆம் தேதி நடைபெற இருந்தது.

 

இந்த நிலையில், 26 ஆம் தேதி பாவனாவின் திருமணம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக, அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 3 வது வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை நடிகை பாவனாவே தெரிவித்துள்ளார்.