Jan 04, 2019 09:41 AM

விமான நிலையத்தில் காஜல் அகர்வாலுக்கு நேர்ந்த சோகம்! - ஊழியர்கள் மீது பரபரப்பு புகார்

விமான நிலையத்தில் காஜல் அகர்வாலுக்கு நேர்ந்த சோகம்! - ஊழியர்கள் மீது பரபரப்பு புகார்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினான காஜல் அகர்வால், பாலிவுட் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

இதற்கிடையே, காஜல் அகர்வாலுக்கு விமான நிலையத்தில் சோகமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது குறித்து அவரே வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இது குறித்து கூறிய காஜல் அகர்வால், ஒருநாள் காலையில் அந்த விமான நிலைய கவுண்டருக்கு சென்றதும், அங்கிருந்த பெண் ஒருவர் என்னை தேவையில்லாமல் அலைக்கழித்தார். நான் சீக்கிரமாகவே அங்கு சென்றிருந்தாலும் எனக்கு தேவையில்லாத சங்கடங்களை அங்கிருந்தவர்கள் கொடுத்தனர்.

 

மேலும் விமானத்துக்கு செல்ல வேண்டிய நுழைவாயிலையும் மூடி இருந்தனர். இதனால் நான் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தேன். இதை நான் விமான நிர்வாகத்திடம் கூறிய போது, என்னை தனியாக அழைத்து பேச முயற்சித்தனர். ஆனால் நான் அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை, என்று தெரிவித்துள்ளார்.