Mar 04, 2019 01:57 PM

”பஸ்ட் நைட் எப்போ” - ரசிகர்களின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை

”பஸ்ட் நைட் எப்போ” - ரசிகர்களின் கேள்வியால் அதிர்ச்சியடைந்த நடிகை

சினிமாவை காட்டிலும் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு தான் தற்போது அதிக மவுசு. எளிதில் மக்களிடம் சென்றடைந்துவிடும் இவர்கள் சில நேரங்களில் ரசிகர்களால் தர்மசங்கத்திற்கு ஆளாவதும் உண்டு. நடிக்கும் சீரியலில் அவர்களின் கதாபாத்திர பெயரிலேயே அவர்களை அழைக்கும் ரசிகர்கள், சீரியலில் அவர்களின் கதாபாத்திரம் செய்வதை நிஜத்திலும் கேட்டு வருகிறார்கள்.

 

இப்படி கேட்பவர்கள், ஆரம்பத்தில் சீரியல் நடிகைகள் சிலரிடம், ”திருமணம் எப்போது” என்று கேட்டு வந்த நிலையில், தற்போது நடிகை ஒருவரிடம் “பஸ்ட் நைட் எப்போ” என்று கேட்டு அதிர வைத்துள்ளனர்.

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ‘நாயகி’ சீரியலில் வித்யா பிரதீப் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் அதில், ஹீரோவை திருமணம் செய்ய பல பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒரு வழியாக அவரை கரம் பிடித்த நிலையில், இருவருக்கும் பஸ்ட் நைட் மட்டும் இதுவரை நடைபெறவில்லை.

 

இந்த நிலையில், வித்யா பிரதீப்பை பார்க்கும் ரசிகர்கள், அவரிடம் “பஸ்ட் நைட் எப்போ” என்று கேட்கிறார்களாம். 

 

ரசிகர்களின் இந்த கேள்வியால் சப்செட்டாகியிருக்கும் திவ்யா பிரதீப், ”கல்யாணம் ஆவதற்கு முன்பு எப்போது திருமணம் என்று தான் கேட்டார்கள். அது ஓரளவுக்கு மரியாதையாக தான் இருந்தது.

 

Vidya Pradeep

 

ஆனால் தற்போது திருமணம் முடிந்துவிட்டதால் எப்போது சாந்தி முகூர்த்தம் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதுவும் கூட்டமாக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் இவ்வாறு கேட்கும்போது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.” என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.