Jan 09, 2019 06:40 AM

மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகையின் இறுதி வாட்ஸ்-அப் பதிவு!

மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகையின் இறுதி வாட்ஸ்-அப் பதிவு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அருகே பாலத்தின் கீழ் பிரபல நடிகை சிம்ரன் சிங்கின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மர்மமான முறையில் இறந்து கிடந்த சிம்ரன் சிங்கின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்த நிலையில், அவரது கணவர் மீது சிம்ரன் சிங்கின் பெற்றோர் புகார் அளித்தனர்.

 

இந்த நிலையில், சிம்ரன் சிங், தனது தோழிக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசெஜ்  வெளியாகியுள்ளது. அதில், நான் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளேன், அனைவரையும் விட்டுச் செல்ல விரும்புகிறேன், என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

மேலும், இவரது மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதால், போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.