Jan 20, 2019 07:15 AM

என்னுடன் வீட்டில் தங்கினார்! - பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை புகார்

என்னுடன் வீட்டில் தங்கினார்! - பிரபல கிரிக்கெட் வீரர் மீது நடிகை புகார்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிலர் பெண்கள் விஷயத்தில் சர்ச்சையில் சிக்கி வருவது வழக்கமாகியுள்ளது. ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் பெண்கள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்க, மற்றொரு நட்சத்திர வீரர் பிரபல நடிகை ஒருவருடன் வீட்டில் தங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மா, மீது பிரபல பாலிவுட் நடிகையான சோபியா ஹயாட், ரோகித் சர்மா தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், தன்னுடன் ஒன்றாக வீட்டில் பல நாட்கள் தங்கியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

 

Rohit Sharma

 

இது குறித்து கூறிய அவர், ”நான் லண்டன் சென்றிருந்தேன், அங்கு ஒரு கிளப்பில் எனது நண்பருடன் நடனமாடி கொண்டிருந்த பொழுது தான் ரோகித்தை முதன் முறையாக பார்த்தேன். எனது நண்பர் தான் ரோகித்தை என்னிடம் அறிமுக செய்து வைத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டே கிளப்பின் ஓரமான இடத்திற்கு சென்றோம். பிறகு நான் கிளம்புவதாக சொன்னவுடன் எனக்கு அவர் முத்தம் கொடுத்தார். மேலும், ரோகித் சர்மா சில நாட்கள் எனது வீட்டில் கூட தங்கியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.