எழுத்தாளர் இமயத்திற்கு ’இயல் விருது’! - உற்சாகத்தில் ‘முந்திரிக்காடு’ குழு

கனடாவில் இயங்கி வரும் ‘தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை’ சார்பாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கி வரும் எழுத்தாளர்களை கெளரவிவ்க்கும் வகையில், ‘இயல் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுகான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருது, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயக்க் இவரும் எழுத்தாளர் இமயத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதி ஆணவக்கொலையைப் பற்றி பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பெத்தவன் நெடுங்கதை தான், இயக்குநர் மு.களஞ்சியம் தயாரித்து இயக்கத்தில், புதுமுகங்களோடு இயக்குநர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ‘முந்திரிக்காடு’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகியுள்ளது.
ஆகவே, எழுத்தாளர் இமயத்திற்கு 2018 ஆம் ஆண்டுக்கான ‘இயல் விருது’ அறிவிக்கப்பட்டதில் ‘முந்திரிக்காடு’ படக்குழு உற்சாகமடைந்துள்ளது.