Jan 08, 2018 07:03 AM

மலேசிய கலை நிகழ்ச்சியால் அவமானப்பட்ட நடிகர் நடிகைகள்!

மலேசிய கலை நிகழ்ச்சியால் அவமானப்பட்ட நடிகர் நடிகைகள்!

5,6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்திய நடிகர் நடிகைகள் தற்போது சென்னை திரும்பிவிட்ட நிலையில், கலை நிகழ்ச்சியால் பல நடிகர் நடிகைகள் அவமானப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏற்கனவே, தனக்கும் சரத்குமாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை, என்று ராதிகா சமூகவலைதளத்தில் கூறிய நிலையில், நடிகர் எஸ்.வி.சேகரும் மறைமுகமாக மலேசிய கலை நிகழ்ச்சி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற பல நடிகர் நடிகைகள் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார்கள். இப்படி திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுமார் 130 பேர் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.