Oct 19, 2017 04:17 AM

‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்பு - விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

‘மெர்சல்’ படத்திற்கு எதிர்ப்பு - விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்!

’மெர்சல்’ படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் மற்றும் மைசூரில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தின் போது, விஜய் ரசிகர்களுக்கும், கன்னட அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மல்லேஸ்வரம் ராதாகிருஷ்ணா தியேட்டரில் ‘மெர்சல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் கட்-அவுட் வைத்து படத்தின் ரிலிஸை கொண்டாடினார்கள்.

 

கர்நாடகாவில் தமிழ் திரைப்படம் வெளியிடக் கூடாது என முழக்கமிட்டபடி வந்த கன்னட அமைப்பினர் விஜய் ரசிகர்கள் வைத்திருந்த கட் அவுட்டுகளை அகற்றினர். இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் கன்னட அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மெர்சல் படம் திரையிடப்படவில்லை.

 

இதேபோல் மைசூருவில் தியேட்டர் ஒன்றிலும் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அங்கும் மெர்சல் திரையிடப்படவில்லை.

 

மேலும், விஜய் ரசிகர்கள் கன்னட அமைப்பினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்களால் மைசூர் மற்றும் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.