Mar 11, 2019 05:42 AM

படம் பார்பவர்களை ஏங்க வைக்கும் ‘நெடுநல்வாடை’!

படம் பார்பவர்களை ஏங்க வைக்கும் ‘நெடுநல்வாடை’!

பி ஸ்டார் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் 50 பேர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நெடுநல்வாடை’. இப்படத்தை இயக்கியிருக்கும் செல்வக்கண்ணனுடன் கல்லூரியில் படித்தவர்கள் தான் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

 

பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார்.

 

வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து இயக்குநர் செல்வகண்ணன் பேசுகையில், “எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல்வாடை  படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை.

 

இந்த படம் பார்க்கிறவர்கள்  இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி இருப்பீர்கள்.

 

இது 75 சதவீதம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட படம். பூ ராமை நான் ஒவ்வொரு காட்சியிலும் என் தாத்தாவைத்தான் பார்த்தேன்.

 

Nedunalvaadai

 

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி.மதன் இப்படத்தை  ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.” என்றார்.