சேதுராமன் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்பது நம்ப முடியவில்லை! - பிரபலத்தின் பதிவு
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் நடிகராக அறிமுகமான சேதுராமன், சென்னையின் பிரபலமான தோல் மருத்துவராகவும் திகழ்ந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர், நேற்று இரவு மாரடைப்பினால் மரணமடைந்தது தமிழ் சினிமாவையும், மருத்துவ துறையையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பால் தமிழகமே முடங்கி போயிறுக்கும் நிலையில், இதுபோன்ற திடீர் மரணங்களால் தமிழகம் மேலும் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
27 வயதுடைய நடிகரும், மருத்துவருமான சேதுராமன் மரணம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பிரபல எழுத்தாளர் பத்மா, ”ஆறு நாள் முன்னால் கூட டாக்டர் சேதுராமன் பேசிய நேர்காணலை கேட்டேன். கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசியிருந்தார். ஆனால், இன்று அவர் இல்லை. மாரடைப்பால் அவர் இறந்து விட்டார் என்று நம்ப முடியவில்லை. சேதுராமன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.” என்று சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆறு நாள் முன்னால் கூட டாக்டர் சேதுராமன் பேசிய நேர்காணலை கேட்டேன் .கொரோனா விழிப்புணர்வு பற்றி பேசி இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை மாரடைப்பால் இறந்து விட்டார் என்று நம்ப முடியவில்லை ..சேதுராமன் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறான் pic.twitter.com/byTH7pgxDm
— WriterVPadmavathy (@padmavathyvae) March 26, 2020