Jan 29, 2019 10:54 AM

சினிமாவுக்கு முழுக்கு போட்ட வினய்! - வேறு தொழிலுக்கு தாவினார்

சினிமாவுக்கு முழுக்கு போட்ட வினய்! - வேறு தொழிலுக்கு தாவினார்

‘உன்னாலே உன்னாலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். பெங்களூரை சேர்ந்த இவர், தனது முதல் படத்தை தொடர்ந்து ‘ஜெயம் கொண்டான்’, ‘மிரட்டல்’, ‘ஒன்பதுல குரு’, ‘என்றென்றும் புன்னகை’, ‘அரண்மனை’ என்று பல படங்களில் நடித்து வந்தாலும், அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

 

இதற்கிடையே, மிஷ்கியன் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்த வினய்க்கு, தொடர்ந்து வில்லன் வேடத்தில் நடிப்பதற்கே அழைப்பு வந்ததாம். வேறு வழியில்லை என்று, ‘நேத்ரா’ என்ற படத்திலும் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார்.

 

இப்படம் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதற்காக படத்தின் இயக்குநர் வினயை அழைக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது போனை எடுத்த அவரது மேனஜர், ”வினய் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு, அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்ய கிளம்புட்டாரு” என்று கூறியிருக்கிறார்.