Mar 15, 2019 07:49 AM

படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா! - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா! - வெளுத்து வாங்கும் ரசிகர்கள்

பலரது கண்டனத்துக்கு ஆளான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அவர் அப்படத்தில் நடித்த போது அவரது வயது 18 க்கும் குறைவானது என்பதை அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

மேலும், அப்படத்தில் நடித்தது குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்ததை கண்டுகொள்ளாத யாஷிகா ஆனந்த், தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை கூறியதோடு, தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த்,  தற்போது சோம்பி என்ற திரைப்படத்தில் நடிப்பதோடு 18+ என்ற வெல் சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தாலும், இந்த புகைப்படத்துக்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தின் கீழ் மிக மோசமான வார்த்தைகளால் கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.